சமூகம்

சமூகம்


சமூகம் என்பது, தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த ஒரு மனிதர் கூட்டத்தைக் குறிக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது, இது பல்வேறுபட்ட மக்களை அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய ஒரு பொருளியல், சமூக மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பு எனலாம். சமூகம் என்பது "தமிழர்" என்பது போல ஒரு குறிப்பிட்ட மக்களையோ, "இலங்கை" என்பதுபோல ஒரு நாட்டையோ அல்லது "மேல்நாட்டுச் சமூகம்" என்பதுபோல ஒரு பரந்த பண்பாட்டுக் குழுவையோ குறிக்கக்கூடும்[1] .
அரசறிவியலில், சமூகம் என்பது மனிதத் தொடர்புகள் முழுமையையும் குறிக்கப் பயன்படுகிறது. சமூகவியல் போன்ற சமூக அறிவியல் துறைகளில், சமூகம் என்பது ஓரளவு மூடிய சமூக முறைமையை உருவாக்கும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கும். இதில், பெரும்பாலான ஊடுதொடர்புகள் அதே கூட்டத்தைச் சேர்ந்தவர்களுடனேயே இடம்பெறுகின்றன. சமூகம் என்பது சில வேலைகளில் பண்பாடு என்பதிலிருந்து முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிளிபர்ட் கீர்ட்ஸ் என்பவர், சமூகம் என்பது சமூகத் தொடர்புகளின் உண்மையான ஒழுங்கமைவு என்றும், பண்பாடு என்பது நம்பிக்கைகளாலும், குறியீட்டு வடிவங்களாலும் ஆனது என்றும் குறிப்பிட்டார்
ரிச்சார்ட் ஜெங்கின்ஸ் என்னும் சமூகவியலாளர், சமூகம் என்பது மனிதர் எதிர்கொள்ளும் பல்வேறு இருப்பியல் பிரச்சினைகளைக் கையாளுகிறது என்கிறார்.
  1. புலன்களால் உணரப்படும் உலகம் மனித அனுபவத்தின் ஒரு சிறு பகுதியே. எனவே உலகைப் புரிந்து கொள்வதற்கு, மனிதத் தொடர்புகளைப் பண்பியல் (abstract) அடிப்படையில் (அதாவது, சமூகம் என்பதன் மூலம்) உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
  2. பல தோற்றப்பாடுகளை தனிப்பட்ட நடத்தைகளாகப் பார்க்க முடியாது. சில நிலைமைகளை விளக்குவதற்கு, "பகுதிகள் எல்லாவற்றின் கூட்டுத்தொகையிலும் பெரிதான ஒன்று" தேவையாக இருக்கிறது.
  3. கூட்டுநிலை, தனிப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரதும் வாழ்க்கைக் காலத்தையும் தாண்டி நிலைக்கக்கூடியது.
  4. மனித நிலைமைகள் எப்பொழுதும் எமது புலன்கள் தரும் சான்றுகளுக்கும் அப்பால் செல்லுகிறது; நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் கூட்டுநிலையோடு பிணைக்கப்பட்டுள்ளது[4].
சமூக கட்டமைப்பு
சாதிய அமைப்பே இலங்கையின் சமூக கட்டமைப்பின் சமூக அதிகார படிநிலையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும்பிரிவுகளில் காணலாம். அவற்றினிடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டபொதும் நாட்டின் அரசியலிலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.

சாதி அமைப்பு: இலங்கை சமூக கட்டமைப்பின் அடித்தளமாகப் பிறப்பை அடிப்படையாகக்கொண்ட சாதி அதிகாரப்படிநிலையே காணப்படுகின்றது. இந்தச் சாதிக்கட்டமைப்பு சமயம், தொழில், பொருளாதாரம் போன்ற விடயங்களில் ஒருவரின் சமூக நிலையினை நிர்ணயிக்கின்றது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும்பிரிவுகளில் காணலாம். வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளைத் தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால், மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படலாயின. தற்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும், நாட்டின் அரசியலிலும், திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி இன்னமும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது.
றோடி எனப்படும் சாதியினரே இலங்கையின் மிகக் கீழ் சாதியினர் ஆவர். சிங்கள அரசவம்சத்தில் றோடியர்கள் தோன்றிய போதும், இவர்களின் முன்னோர்கள் நரமாமிசம் உட்கொண்டமையால் இவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டனர். இவர்களைத் தீண்டுவது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது. இவர்கள் குப்பாயம் எனும் ஒதுக்குப்புறப் பகுதிகளில் வசிக்க வேண்டியிருந்ததுடன், றோடிய ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேல் உடையணியத் தடைசெய்யப்பட்டிருந்தனர்.
fy;tp xU KjyPL
அரசு மற்றும் தனியார் நிறுவ னங்கள் கல்விக்கு அதிக முக்கியத் துவம் கொடுத்து செலவு செய்ய வேண்டும் என்று ஹெச்.டி.எப்.சி.யின் தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.
இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் கல்விக்காக நாம் முதலீடு செய்வது ஜிடிபியில் வெறும் 3 சதவீதம்தான். உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா.
அதனால் கல்வியில் முதலீடு செய்யும் போதுதான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றார். குர்கானில் தன்னுடைய தலைமையில் தொடங்கப்படும் முதல் பள்ளியான ஹெச்.டி.எப்.சி. பள்ளியின் தொடக்க விழாவில் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தபோதிலும், இந்தியாவில் கல்விக்கான தேவை உயர்ந்துகொண்டே வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இந்தியாவில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வில்லை. காரணம் அனைவ ருக்கும் சரியான கல்வி கிடைக்கவில்லை. அதனை தீர்க்கும் முயற்சிதான் இந்த பள்ளி என தீபக் பரேக் தெரிவித்தார்.
ஒரு மாணவனின் முதல்படி பள்ளிதான். சிறந்த கல்வி கொடுப் பதே ஹெச்.டி.எப்.சி. பள்ளியின் நோக்கம் என்றார்.
இந்த பள்ளி வரும் 2015-16 கல்வி ஆண்டு முதல் செயல்பட தொடங்கும்.
இந்த பள்ளி சிறந்த கல்வி யாளரான அனிதா மக்கார் தலை மையில் செயல்படும் என்றார்.
இந்தியாவில் இருக்கும் பள்ளிகளில் 8 சதவீதம் தனியார் பள்ளிகளாகும். ஆனால் படிக்கும் மாணவர்களில் 40 சதவீதம் தனியார் பள்ளியில்தான் படிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஹெச்டிஎப்சி பள்ளி மூலம் கல்வித் துறையில் ஒரு சிறிய மாற்றத்தை தொடக்கி வைக்கிறோம். அனைவருக்கும் தரமான கல்வியை கொடுக்க நினைக்கும் ஒரு சிறிய முயற்சிதான் இது என்று அனிதா மக்கார் தெரி வித்தார்.
நடுத்தர மக்களுக்கு வீட்டுக் கடனை வழங்கியதில் முன்னோடி யான ஹெச்டிஎப்சி வங்கி, தரமான கல்வியை அனை வருக்கும் சென்று சேர்ப்பதற்கான வேலையை தொடங்கி இருக்கிறது என்றார்.
வீட்டுக்கடன் கொடுப்பதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஹெச்.டிஎப்சி ஆகும். கடந்த 37 வருடங்களாக 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக்கடன் கொடுத்திருக்கிறது. இந்த குழுமத்துக்கு 5.5 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கி றார்கள்.

கல்வி

கல்வி என்பது அடிப்படை மனித உரிமை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86ஆவது பிரிவில் "6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அவர்களுடைய அடிப்படை உரிமை" என்று கூறப்பட்டிருக்கிறது.அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இந்தியா முழுவதும் ஆரம்ப கல்வி / அனைவருக்கும் கல்வி இயக்கமானது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

கல்வி துறையில் ஐ.சி.டி-யின் பங்கு

தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பமானது கல்வி துறையில் மிக முக்கியமான அங்கமாகும். இது கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அளித்து கற்றல் சூழலை மேம்படுத்தியுள்ளது.

கல்வி
ஒவ்வொரு குடிமகனின் மற்றும் நாட்டின் மேம்பாட்டுக்கும், ஆரம்ப கல்வியே அடித்தளமாக அமைக்கிறது. தற்போதைய கடந்த காலத்தில், இந்தியா ஆரம்ப கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அவையாவன; ஆரம்ப கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், பாதியில் விட்டுச்செல்லாமல் கல்வியை தொடர்வது, ஒழுங்காக பள்ளிக்கு வருதல் மற்றும் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு கல்வியை விரிவு படுத்துதல் ஆகும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, இந்தியாவின் மேம்பட்ட கல்வி திட்டங்களே பெரும் பங்கினை வகிக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவின் தொடக்கநிலை கல்வியின் தரமும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தின்படி குழந்தைகளுக்கு பதினான்கு வயது வரை, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில், தற்போது பாராளுமன்றம், கல்வி உரிமை விதியை கொண்டு வந்துள்ளது. இதன்படி 6 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்டை உரிமையாகும். இந்த நேர்த்தியான இலக்கான, எல்லாருக்கும் தொடக்ககல்வி கிடைக்கச் செய்தலை (அதாவது எல்லா பகுதிகளிலும் உள்ள, 100 சதவீதம் குழந்தைகளும் தொடக்க கல்விக்கு பதிவு செய்தல் மற்றும் யாரும் விட்டுச் செல்லாமல் இருத்தல்), இன்னும் இந்தியா அடையவில்லை. இந்த இலக்கை அடையவே, அரசானது 2001-ல் சர்வ சிக்ஷா அபியான் என்னும் திட்டத்தை இந்தியா முழுவதும் நிறுவியது.
இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ICT யானது, குறிப்பாக கிராமபுற இந்தியாவில் கல்வி அமைப்பில் இருக்கும் மற்றும் இல்லாத வசதிகளை சரி செய்து வருகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறைய அறிவுபூர்வமான செய்திகளை வழங்கி, தொடக்க கல்வியை எல்லாருக்கும் கிடைக்க செய்வதற்கான முயற்சியை, இந்தியா டெவலப்மென்ட் கேட்வேயின், ஆரம்ப கல்வி முகவையானது புரிந்துவருகிறது

Comments

Popular posts from this blog

இணையம்

மகாத்மா காந்தி